Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் 7,350 ஆக இருந்த தினசரி கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 5,784 ஆக குறைந்தது.
இந்தியாவில் நேற்றைய (டிச.,13) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.37 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.37 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.26 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் இன்று (டிசம்பர் 14) காலை 8 மணி நிலவரப்படி 133.88 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 66,98,601 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.